இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 01

Reha
2 years ago
இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 01

குறள்:- 01
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு.

பொருள்:- சாலமன் பாப்பையா
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பொருள்:- SHELVA SWISS
தமிழ் எழுத்துக்களெல்லாம் * அ* என்ற அகரம் எனப்படும் ஆரம்ப எழுத்தில் ஆரம்பிப்பது போல, எம்மைத் தாங்கி எம்மைச் சுமக்கும் இவ்வுலகமும், இவ்வுலகின் இயக்கமும் கடவுள் எனப்படும் அரும்பெரும் அளவற்ற எல்லையைக் கொண்ட சாதக குணம்கொண்ட ஆற்றலே அனைத்து உயிர்கள் வாழ்வுக்கும், சடப்பொருட்களின் வாழ்வுக்கும் ஆரம்பமும் முடிவுவரை ஆரம்பித்து இருக்கிறது.